கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக
இருந்த பெண் சந்தேகநபரை அடையாளம் காண பொது மக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு - 071-8591727
பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு - 071-8591735
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள்,
பெயர் - சிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
வயது - 25 வயது
தே.அ.அ.இல- 995892480V
முகவரி - 243/01, நீர்கொழுப்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர் நேற்று (19) புத்தளம் - பாலாவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.