குவைத்திலிருந்து வந்த  மூன்று இலங்கையர்கள் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நபர்கள் நாட்டிற்கு வந்த வேலை நடத்தப்பட்ட சோதனையின் போது  கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் கூறுகையில், கொரோனாவை கட்டுப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் செயற்படுத்தப்படாத பல சம்பவங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பி.சி.ஆர் நடத்தப்பட உள்ளது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகளை விரிவுபடுத்துவதற்கும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறுகிறார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேற் கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் தேவையான வசதிகளை விரைவுபடுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி