போர்க்குற்றங்கள்  சம்பந்தமாக உள்ளூர் மற்றும் சர்வதேச குற்றச்சாட்டுகளை இலங்கை பலமுறை மறுத்து வருகிறது. ஜனாதிபதி போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து , போரில் ஒரு நபரின் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாதா என்று சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ, "ஒரு போரில் ஒரு நபரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சேற்றில் குளித்து சேறு படாமல் தடுப்பது போன்றது" என்று கூறியுள்ளார்.

இலங்கை ராணுவம் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தி ஹிந்து இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட  கட்டுரைக்கு  பதிலளிக்கும் வகையில் மே 19 ஆம் திகதி நடைபெற்ற பதினோறாவது ("ரணவீரு நினைவு தினத்தில் ") இராணுவ வெற்றி தினத்தில் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ ஆற்றிய உரை. இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அதனது அறிவிப்பில், போர்வீரர்களை இலக்காகக் கொண்ட குற்றச்சாட்டுகளை இலங்கை ஆதரிக்கவில்லை கோதபாய ராஜபக்ஷ மே 20 அன்று தி ஹிந்து பத்திரிகையாளர் மீரா சீனிவாசனுடன் இடம்பெற்ற நேர்கா னல் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்களின் படி.

அந்த அறிக்கையில் உண்மையான நிலை காண்பிக்கப்படவில்லை

அந்த அறிக்கையில் உண்மையான நிலைமை காண்பிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி கருதுகிறார்.

யுத்தத்தின் கொடூரங்கள் காரணமாக, சர்வதேச மனிதாபிமான சட்டத்தை வெள்ளை மற்றும் கருப்பு என்று தெளிவாக வேறுபடுத்த முடியாது, யாரையும் குற்றம் சாட்ட போதுமானது ஆதாரம்  இல்லை என்று மேலும் கூறுகிறது.

இராணுவ தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நீதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"ஒரு இராணுவ நடவடிக்கையின் போது நிகழ்த்தப்படும் நடவடிக்கைகளுக்கு மாறாக, குறிக்கோள்களை அடையாளம் கண்டு நியாயப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் யுத்தத்தின் முடிவில் இராணுவம் அல்லாத இலக்குகள் மற்றும் பொதுமக்களின்  மீதான தாக்குதல்,உயிரிழப்புகள் விகிதாசாரத்தின் கொள்கைக்கு ஏற்ப உள்ளதா என்பதை முடிவுக்கு கொண்டுவர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை 2015 இல் வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

ஷவேந்திர சில்வா:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட தற்போதைய இராணுவத் தளபதி “போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற வகையில் தி ஹிந்து வலைத்தளத்தளம் வெளியிட்டிருக்கும் அறிக்கை  மிகவும் நியாயமற்றது. கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற உண்மைகள் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு கூறுகிறது.

ஷவேந்திர சில்வா:தற்போதைய இராணுவத் தளபதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார். “போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் என்ற வகையில் தி ஹிந்து வலைத்தளம் கூறுவது நியாயமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் ஆதாரமற்ற உண்மைகள் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு கூறுகிறது.

எவ்வாறாயினும், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது போர்க்குற்றங்கள் மற்றும் சட்டவிரோத கொலைகள் உட்பட மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையின் அடிப்படையில், அமெரிக்காவும் அவருக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது.

இதற்கு பதிலளித்த இலங்கை அரசாங்கம் “ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு  ஏற்படும் வகையில்  வெளிநாட்டு அரசு கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கிறது. ”

"அனுமானிக்கப்பட்ட" அல்லது "தவறான" தரவு

ஊடகவியலாளர் மீரா சீனிவாசனின் அறிக்கையின்படி, யுத்தத்தின் கடைசி நாட்களில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்ற கூற்றை ஜனாதிபதி ஊடக பிரிவு நிராகரித்துள்ளது, அவை ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய புள்ளிவிவரங்களாக “கருதப்படுகிறது” அல்லது “துல்லியமற்றவை” .

எவ்வாறாயினும், யுத்தத்தின் பின்னர், அடுத்தடுத்த அனைத்து அரசாங்கங்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகளை பலமுறை நிராகரித்தன, புள்ளிவிவரங்களின் உண்மையை சரிபார்க்க சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும், அவை ஐக்கிய நாடுகள் சபையின் பல ஆய்வு அறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட உறவினர்களை நினைவுகூறும் வகையில் வடக்கு மக்களுக்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தனர், ஜனாதிபதி இராணுவ வெற்றி நினைவு தினத்தை உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் பங்களிப்புடன் கொழும்பில் நடத்தியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 இராணுவமயமாக்கலின் பிரச்சினை!

கல்வி மற்றும் விவசாயம் உட்பட பல பகுதிகளில் இராணுவத்தின் வெளிப்படையான ஈடுபாட்டை போருக்குப் பிந்தைய இலங்கையில் வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் பிரச்சினை என்றும் தி ஹிந்துவின் அறிக்கை விவரித்தது.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி ஊடக பிரிவு, "போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவமும் பொதுமக்களும் நெருக்கமான உறவுகளுக்கான வாய்ப்புகளை தெளிவாக உருவாக்குகிறார்கள் என்பது தெளிவாகிறது" என்று கூறியுள்ளது.

ஜனாதிபதின் இராணுவ ஆட்சியில் கஜாபா படைப்பிரிவில் பணியாற்றிய இராணுவத்தினர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பல இராணுவ அதிகாரிகளுக்கு  இப்போது அரசாங்கத்தின் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொவிட் தொற்றுநோயை கட்டுபடுத்தும் உயர் பதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இராணுவமயமாக்கலின் எடுத்துக்காட்டுகள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி