40 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஹோமாகம தியகமவில் ஒரு புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்கவுள்ளதாக பந்துல குணவர்தன கூறுகிறார்.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூளைக் குழப்பத்தால் கூறப்பட்ட ஒரு கதை இது பற்றி எனக்கு கூட தெரியாது என்று கூறுகிறார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான அரசியல்வாதியான மஹிந்தானந்த அலுத்கமகே, SLTOP TUBE சமூக ஊடக செனலின் 'இது யார்?என்ன செய்கிறார்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார்.

“இப்போது நாற்பதாயிரம் இருக்கைகள் கொண்ட ஒரு கிரிக்கெட் அரங்கத்தை உருவாக்கப் போகிறோம் என்று ஒரு கதை இருக்கிறது. இந்த நேரத்தில் நம் நாட்டுக்கு இது தேவையா? ”என்று மஹிந்தானந்த அலுத்கமகே கூறினார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"எங்களுக்கு மூன்று சர்வதேச அரங்கங்கள் இருக்கின்றன. இது பந்துல குணவர்தனவுக்கு தெரியாதா என்ன அவருக்கு மூளை பிரச்சினை இருப்பதால் இப்படி கூறியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஹம்பாந்தோட்டை பல்லேகல மற்றும் கெத்தாராம.  போன்ற மைதானங்கள் இலங்கையில் உள்ளதால் நாம் உலகக் கோப்பையையும், டி 20 யையும் கூட வெல்ல இங்கு நடத்த முடியும்.

இலங்கையில் எந்த போட்டியும் இப்போதைக்கு இல்லை. எனவே, இந்த நேரத்தில் கிரிக்கெட் மைதானம் தேவையில்லை. அவர் ஏன் அந்த திட்டத்தை முன்வைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை.இது பொருத்தமற்றது.

நான் நினைக்கவில்லை ஜனாதிபதி குறைந்தபட்சம் ஐந்து சதமாவது அரசாங்கப் பணத்திலிருந்து கொடுப்பார் என்று

SLTOP TUBE: ஆனால் SLC உள்ள பணம் மக்களின் பணம் அதை ஒதுக்கினால் என்ன செய்வது?

மஹிந்தானந்த: “அரசாங்கத்தின் பணம் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்று எஸ்.எல்.சி தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.சி.சி யிடம் பணம் எடுத்து, 2020 உலகக் கோப்பை இலங்கையில் விளையாட மைதானங்களை செய்ய முடியும்  என்றார். நான் அப்படி நினைக்கவில்லை நாங்கள் உலகக் கோப்பையை இங்கு நடத்த முடியும்

எனவே ஒரு புதிய மைதானத்திற்கு முதலீடு செய்வதற்கு பதிலாக, இந்த மூன்று அரங்கங்களையும் கட்டியெழுப்ப தேவையான வசதிகளை உருவாக்கவும் முடியும்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அரசியல் நிகழ்ச்சியில் பல சர்ச்சைக்குரிய அறிக்கைகள் இருப்பதாகவும், அந்த வீடியோ சனிக்கிழமை (மே 24) ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் சாந்த பண்டார 'Theleader.lk' இடம் கூறினார்.

 

"மொனராகலையிலிக்கும் ஒரு விளையாட்டு மைதானம் பற்றி ஒரு கனவு இருந்தது"

இலங்கையில் மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமாணப் பணிகள் அனைத்தும் தொடங்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிக்கை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

“மொனராகல மக்களுக்கு இதுபோன்ற ஒரு கனவு இருந்தது.மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் மைதானம்  ஒன்றை உருவாக்குவோம்.மொனராகல கச்சேரியின் அழகிய சூழல் அழிக்கப்பட்டுள்ளது.

Monaragala1

Monaragala2

மைதானம் ஒன்று செய்ய திட்டமிடப்பட்டது. மரங்களை வெட்டி, அழிக்கப்பட்ட நிலத்தில் திட்டமிட்ட மைதானம் முடிந்ததால் நிலைமை மீண்டும் மோசமானது ஹோமாகமவில் அமைந்துள்ள மரங்களை வெட்டுவதற்கு முன் இவை பற்றியும் முடிவெடுக்க வேண்டும்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ கடந்த காலத்தில் ரப்பர் எஸ்டேட் எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது ... கூகுள் மெப் இப்போது தொடக்க புள்ளியைக் காட்டுகிறது ... புகைப்படங்கள் அரங்கத்தின் நிலையை தற்போது பாதியிலேயே காட்டுகின்றன.

எந்த அரசியல் கருத்தையும் பாரபட்சம் காட்டாது .ஆனால் தேசிய கொள்கை இல்லாதது தவறு ..

கொரோனா அல்ல ... அது எதுவாக இருந்தாலும் அது மாறாது ...

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி