இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான காமினி செனரத் நிதி அமைச்சின் பிரதி நிதிச் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகல மருத்துவ ஆலோசனையின் பேரில் விடுப்பு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திடீர் இதய நோய்க்கு சிகிச்சைக்காக அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு  வீட்டில் இருந்து ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நான்காவது பகுதியை டெண்டர் நடைமுறை இல்லாமல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு நிர்மாணிக்க கொடுத்தமையால் அமைச்சரவை ஆவணத்தை தயாரிப்பதில் அரசாங்கத்தின் சக்திவாய்ந்த செயலாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நிதி அமைச்சின் செயலாளர் அதிர்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் சமீபத்தில் தனது பல நண்பர்களிடம் கூறியதாவது ஆரம்ப வாய்ப்பில் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி