leader eng

களுத்துறை, அவித்தாவ,

இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி எஸ். கௌதம் மற்றும் எகொட உயன சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்த எஸ். ஹர்ஷநாத் பொது சுகாதார பரிசோதகர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் நான்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் நீராடுவதற்குச் சென்றுள்ளனர்.

இதன்போதே இவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான  பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி