வவுனியா தோணிக்கல்

பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தம்பதியரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒரு வருடமாக சிறையில் உள்ள சந்தேக நபர்கள் 7 பேருக்கும் பிணை வழங்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.  இளஞ்செழியன் நிராகரித்தார்.

கடந்த 23-07-2023 அன்று சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பிறந்தநாள் விழா இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய தம்பதியினரை படுகொலை செய்தமை தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தம்பதியரின் பெண் அதற்கு முன் கிராம அதிகாரி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த திருமண்த்தை முறித்துக்  கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்ததால் தம்பதி கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவ ந்துள்ளது.

இதற்குப் பழிவாங்கும் வகையிலே இவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 7 பேரும் ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 9 தடவைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதும் அவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை.

அதனைக் குறிப்பிட்டு, சந்தேகநபர்கள் சார்பில் வவுனியா மேல் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிணை வழங்குவதற்கு எதிராக அரச தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் தனுஷன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் வாதிட்டதால், வவுனியா சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீட்டித்து உத்தரவிட்டார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி