பாறுக் ஷிஹான்

கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய்

ஒன்றில் கிறீஸ் பூசப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் குறித த ரிவோல்வர் வெளியாகிய  நிலையில் அங்கு  விளையாட்டில் ஈடுபட்டவர்கள் கண்டெடுத்து அதனை நேற்று (23) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படைத்துள்ளனர்.

IMG 20240724 105635 800 x 533 pixel

குறித்த துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் (ரிவோல்வர்) இயங்கு நிலையில் காணப்படுவதுடன் ஜேர்மனி  நாட்டு தயாரிப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் இந்ந  துப்பாக்கி தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை .

மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி