அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை

குத்தும் நிலைய திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா பச்சை குத்தும் நிலையத்தை திறக்கச் சென்றிருந்தபோது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
 
பாடகர் கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் பாடகி சுஜீவா பல சத்திரசிகிச்சைகளுக்குப் பின்னர் கட்டண விடுதியில் சிகிச்சை பெற்று தற்போது வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி