கொலன்னாவ மாநகர சபை

பிரதேசத்தை புதிய நகரமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதமர், கொலன்னாவ மாநகரசபை பிரதேசத்தை புதிய நகரமாக்குவதற்கும் புதிய நகரத்தின் வசதிகளை மக்களுக்கு வழங்குவதற்கும் புதிய கவர்ச்சியான பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் அடிப்படை வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கொலன்னாவ மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் மாற்றத்தினூடாக புறநகர் பகுதிகளும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு உட்படுவதுடன் கொலன்னாவ சுத்திகரிப்பு நிலையத்துக்கு  எண்ணெய் கொண்டு செல்லும் ரயில் பாதை பத்தரமுல்லை நகருடன் இணைக்கப்படும்

இதன் மூலம் பல முக்கிய நிர்வாக நிறுவனங்கள் அமைந்துள்ள பத்தரமுல்லை நகருக்கு  விரைவாகச் சென்றடைய முடியும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி