ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் பதில் மனுதாரர்கள் தாக்கல் செய்யும் வகையில் மாவட்ட நீதிபதி, வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை கட்சியின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும், அவர் அந்தப் பதவியை வகிப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த கோப்பினை தாக்கல் செய்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி