அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க

தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் போது சேதமடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட அரசியல் அலுவலகம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதனை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமது கட்சியில் இருந்தே மாற்றத்தை ஆரம்பிக்க தயாராக இருக்கின்றோம். என் தாத்தாவின் சிலை உடைக்கப்பட்டது. நாங்கள் குடியிருந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இவ்வாறு செயற்பட்ட பிள்ளைகளை வெறுப்பதில் பயனில்லை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவால் தூண்டப்பட்டனர். அதை புரிந்துகொள்ள நான் தந்தையாக வேண்டி இருந்தது.

எனவே பெரியவர்களாகிய உங்கள் பொறுப்பு, அந்த குழந்தைகளுக்கு யதார்த்தத்தை விளக்குவது, அவர்கள் உலகத்தை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.  

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி