தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்வதால் இப்படியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத் தேர்தல் தேவை இல்லை என முன்னிலை சோசலிசக்கட்சி அறிவித்துள்ளது.

இம்முறை பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என இறுதி முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் குழு இன்று 16 இரவு 7 மணிக்கு கூடி தீர்மானிக்கவுள்ளது.

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கலை விடுதலை செய்யவேண்டும் என சிறைச்சாலைகள் உயர்அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தலை விட நாட்டு மக்களின் உயிர் முக்கியம் என அவர் தேர்தல் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சி.ல.சு.க மாவட்ட தலைவர்கள் சிலர் மொட்டு கட்சியில் வேட்புமனுவில் ஒப்பமிடவில்லை என்பதாக அறியக்கிடைக்கின்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் சகஆராச்சி இன்று (15) மரணமடைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அவர் யுக்திய செய்தித்தாளின் ஆசிரியரும் லக்பிம பத்திரிகையின் ஆசிரியரும் லேக்கவுஸ் நிறுவனத்தின் நிருவாகக் குழு தலைவரும்  சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முதலாவது செயலாளருமாவர்.

கொவிட் 19 கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு தேர்தலை சில மாதங்களுக்கு தள்ளிப்போடுவது பற்றி தேர்தல் திணைக்களம் பரிசீளிக்கும் இத்தருனத்தில் அப்படி நடந்தால் அது அரசாங்கத்திற்கு பாரியபாதிப்பை  ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

வெளிவிவகார அமைச்சில் கொரோன அச்சம் தனிமைப்படுத்தி சுத்தம் செய்ய நடவடிக்கை.வெளிவிவகார அமைச்சில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றியுள்ளமை தெரிய வந்துள்ளதை அடுத்து அதிகாரியின் சகாக்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானில் இதுவரை மொத்தம் 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ன தேரருடன் ஒரு குழுவினர் அபே ஜன பல கட்சியில் எதிர்வரும்  பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி