விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கும் இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்துக்கும் இடையில் கிரிக்கட் தொடர்பில்

ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலை தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு சொந்தமானது என கூறப்படும் ஜீப் வண்டியை தம்புள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் இருந்து பணம் செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்ததாக வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கண்டெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமை.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (நவம்பர் 27) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்ததுடன், அவரை சிக்க வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாட்டின் நிறைவேற்று அதிகாரியும் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்திற்கு வந்து தன்னை சிக்க வைக்கும் திட்டத்தை தயாரித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கை குறித்தும் அமைச்சர் விவரித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்திற்கு வந்து தன்னை சிக்க வைக்கும் திட்டத்தை தயாரித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கை குறித்தும் அமைச்சர் விவரித்தார்.

“கடந்த வாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து அழகாக திட்டமிட்டு என்னை ஃப்ரேம் செய்தார். அதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு நன்றி கூறுகிறேன்.

“சினமண்ட் கிராண்ட் ஹோட்டலில், நாமல் ஷரித்தை சந்தித்துள்ளார். இதன்போது அவர், “ரொஷான் அண்ணனை ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க” என்று சொல்லியிருக்கிறார். “ரணில் என்பவர் ஒரு நாகப்பாம்பு. அந்தப் பாம்பு எப்போது ரொஷானை தாக்குமென்று தெரியாது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாகம் நல்ல நாகமாகும். தவறு செய்பவர்களிடம்தான் அந்தப் பாம்பு படமெடுக்க வேண்டும். அதை விடுத்து, அது கொத்த வரும் இடம் எது? ஊழல், திருட்டு, மோசடிகளைக் கண்டறிந்து கூறிய என்னையா தாக்க வருகிறது?  இந்த 225 பேருக்கு மத்தியில் இருந்துகொண்டு, அவர், அவர் என்று கூறி யாரையும் போட்டுக்கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ரணசிங்க கூறியிருந்தார்.

“கௌரவமான நீதித்துறையை நான் அவமதிக்கிறேன் என்று ஜனாதிபதி வந்து கூறுகிறார், இந்த நாட்டின் கௌரவமான நீதித்துறையும் நீதிபதிகளும் தூய்மையானவர்கள் என்று நான் அப்போது தெளிவாகச் சொன்னேன்.எங்களுக்கு நீதித்துறை மீது தெளிவான நம்பிக்கை உள்ளது. ஆனால், ஒரு நீதிபதி தொடர்பில் சிக்கல் இருப்பதாக நான் அங்கு கூறினேன்."

“என்னை எப்படி பிரேம் செய்வது என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள், வலான பகுதியில் வைத்து என்னை பிரேம் செய்ய அனுப்பினார்கள்.  ஊழல் தடுப்புப் பிரிவில் உள்ளவர்களுக்கும் இதயமென்று ஒன்று உள்ளதல்லவா? இவர்களை முதலில் குருநாகலுக்குப் போகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அங்கு சென்ற பிறகு எங்கே போவது என்று தெரியவில்லை. பின்னர் கலேவெலவுக்கு போகச் சொன்னார்கள். கலேவெல சென்றபின், யூரோ நிப்போன் என்பது ரொஷான் ரணசிங்க குழுமத்திய் ஒரு நிறுவனம் என்று சொன்னார்கள். பிரச்சினை என்று ஒன்று இருந்தால் அதைச் செய்வதற்கும் ஒரு முறை உள்ளது. நீங்கள் எனது நிறுவனங்களை ரெய்டு செய்ய வேண்டும் என்று சொன்னால், எனது நிறுவனத்தின் சாவிக் கொத்தை உங்களிடம் (சபாநாயகர்) கொண்டுவந்து தந்திருப்பேன். எனது எட்டு நிறுவனங்களின் சாவிக் கொத்துகளையும் இன்றே நான் கையளிக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக சரிபார்க்கவும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை."

“இவ்வாறு ஒரு வாகனம் இருந்ததாகவும் அதற்கு வரி செலுத்தவில்லை என்றும், யூரோ நிப்பொன் நிறுவனம் சோதனையிடப்பட்டே அது கண்டுபிடிக்கப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ றியிருக்கிறார். பத்திரிகைகளும் பொய்யான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனது நிறுவனம் வாகனம் எடுக்கவில்லை. யூரோ நிப்பொன் நிறுவனத்திடம் அவ்வாறு வாகனமொன்று இல்லை. அதில் ரொஷான் ரணசிங்கவின் பெயரரும் இல்லை, உரிமையும் இல்லை. அப்படியிருக்க, என்ன செய்திகளை வெளியிடுகிறார்கள்?

“நீதித்துறையை நான் அவமதிக்க முயற்சித்தேன் என்று இப்போது ஜனாதிபதி கூறுகிறார். அங்கிருந்து ஒரு குழு தம்புள்ளைக்கு செல்கிறது. ஏனென்றால் ஒருபுறம் நீதிமன்றத்தை வெறுக்க வைக்கிறார்கள், மறுபுறம் இது என்னுடையது என்று சொல்கிறார்கள். திருட்டைப் பிடித்துக் கொடுத்ததற்கா எனக்கு இந்த நிலைமை? 69 இலட்சம் பேரின் ஆணை பெற்றே நான் இந்த அமைச்சரவையில் உள்ளேன். அவர் என்னை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். மக்களின் வாக்குகளால் நான் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளேன். இப்படி பழிவாங்க வேண்டாம். இந்தப் பழிவாங்கலுக்காகத்தான் அரசாங்கமும் எதிர்க்கட்சியும்  காத்திருக்கின்றனவா என்று தெரியவில்லை பிரதமரே!”

“எனது உயிர் போகலாம்.. வீதியில் இறக்கலாம்.. இன்றோ நாளையோ, நாளை மறுநாளோ என்று தெரியவில்லை. அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த 134 பேரும் அவரை ஜனாதிபதியாக்கியது எங்களைப் பழிவாங்கத்தானா?” என்று ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி