பல்வேறு நாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் அது தொடர்பான பொறுப்புக்கூறல்
செயல்முறைகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் கிட்டத்தட்ட 24 திட்டங்களுக்கு அமெரிக்க நிதியுதவி வழங்குவதை நிறுத்த வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு அமெரிக்க நிதியுதவி நிறுத்தப்படவுள்ள நாடுகளின் பட்டியலில், இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதலிடம் பெற்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.