பாணந்துறை சாகர மாவத்தையின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள புகையிரத பாலத்தின் கீழ் ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத
நபரொருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத அளவுக்கு உயிரிழந்தவரின் உடல் வீங்கியிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி