அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி பெண் ஒருவர் கொலை

செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (02) பிற்பகல் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மர ஆலையின் ஊழியர் ஒருவரும் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மர ஆலையின் உரிமையாளரான 65 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலையாளிகள் இறந்தவரின் வாய் பகுதியை கத்தியால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்து அத்துருகிரிய பொலிஸ் நிலையம் நூறு மீற்றருக்கும் குறைவான தூரத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி