ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு தலைமையை வழங்குவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (29) மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக அவரது பணியாளர்களின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் அவர் அடுத்த சில தினங்களினுள் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்டம் கட்டமாக அழைத்து அவர்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நவம்பர் 05ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சி அங்கத்தவர்களின் மாநாடு ஒன்றை கூட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

theleader.lk இணையத்தளத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொட்டு கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த சில தினங்களினுள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி