தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் தன்னை தாக்கிய நபரின் கையை வெட்டி அகற்றிய நபர்

குறித்த செய்தி ஒன்று மொரட்டுவையில் பதிவாகியிருந்தது.

கைகளை வெட்டிய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நபரொருவர் மன்னா கத்தியொன்றால் மற்றைய நபரை தாக்கும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

தாக்குதலுக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு சந்தேகநபரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

பொலிசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான நபருக்கும், தாக்கிய நபருக்கும், நேற்று முன்தினம், குடிபோதையில், மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் இரு கைகளையும் வெட்டி அவற்றை எடுத்துக்கொண்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதற்கு முன்னரும் சந்தேகநபர் நபரொருவரின் கைகளை துண்டித்த போதும் அது பின்னர் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டதன் காரணமாக இந்த நபரின் கைகளை வெட்டி அவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கல்கிஸ்ஸ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி