நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற

உறுப்பினர் அன்ஜான் உம்மாவுடன் வடமேல் மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் மேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் இணைந்து கொண்டனர்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (22) இடம்பெற்ற சமூக நீதிக்கான  சிகப்பு நட்சத்திர மக்கள் சக்தி, ஜனநாயக இடதுசாரி அமைப்பின் தேசிய மாநாட்டின் போதே இவர்கள் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

மேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் எராஜ் கிருஷாந்த அல்விஸ், வடமத்திய மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் அநுர திசாநாயக்கா, வடமேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் சமன் புஷ்பகுமார ஆகியோரே இவ்வாறு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தவர்களாவர்.

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய அக்கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட சிகப்பு நட்சத்திர மக்கள் சக்தி அமைப்பின் சுமார்  400 பேர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக நேற்று இதன் போது இணைந்து கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி