மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு, கண்டி
மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்துப் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால், உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.