இலங்கையின் நெருங்கிய நண்பனான சீனாவுடன் எப்போதும் கைகோர்த்து செயற்படுவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை சீர்குலைக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

கொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாகரீகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான பிணைப்பு காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடும் இலங்கைக்குள் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி