இலங்கையின் கிட்டத்தட்ட 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக இலங்கையின் பல்லுயிர்ச் செயலகம்

ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கையானது 435 வகையான பறவையினங்களைக் கொண்ட பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாக இருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டின் சிவப்பு தரவுப் புத்தகத்தில் நாடு தழுவிய ஆய்வின் போது இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பல்லுயிர் பெருக்க செயலகத்தின் இயக்குநர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ரெட் டேட்டா புக் என்பது அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சில உள்ளூர் கிளையினங்களைப் பதிவு செய்யும் பொது ஆவணமாகும். அப்புத்தகத்திலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி