நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரி விநியோகத்தைப் பெறுவது, தற்போது நெருக்கடியான சூழ்நிலையில்

உள்ளதால், நிலக்கரி அனல்மின் நிலையத்தின் முதல் மற்றும் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரங்களை இயக்குவதற்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் 8ஆம் திகதி வரை மாத்திரமே உள்ளது.

ஆலையில் ஏறக்குறைய எழுபத்து இரண்டாயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி மாத்திரமே உள்ளதென்று, ஆலையின் கட்டுப்பாட்டு நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்னும் சில தினங்களுக்கு மாத்திரமே அனல்மின் நிலையத்தை பராமரிக்க வாய்ப்புள்ள போதிலும், எதிர்காலத்தில் நிலக்கரியை வழங்க முடியாவிட்டால், அனல்மின் நிலையத்தை எந்த வகையிலும் கொண்டு நடத்த முடியாது என அப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிலக்கரி இருப்பு குறைந்ததால், அனல்மின் நிலையத்துக்குச் சொந்தமான மூன்றில் இரண்டாவது ஜெனரேட்டரை கடந்த 22ஆம் திகதி முதல் முடக்கவும் அப்பிரிவு முடிவு செய்துள்ளது.

பொதுவாக, புத்தளம் கடலில் ஒவ்வோர் ஆண்டும் செப்டெம்பர் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை விடுமுறை காலம் என்று கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில், ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி இருப்புகளை இறக்கி வைக்க வேண்டும்.

அறிக்கையின்படி, ஆலைக்கு ஒரு நாளைக்கு 7500 மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுகிறது, மேலும் ஆண்டுக்கு 60,000 மெட்ரிக் தொன் அதாவது 38 கப்பல்கள் தேவைப்படுகிறது.

ஆனால், செப்டெம்பர் முதல் இன்று வரை 5 கப்பல்கள் தரையிறங்கியுள்ள நிலையில் ஜனவரி முதல் வாரத்திலேயே 6ஆவது கப்பல் வரும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, ஒரு நிலக்கரி கப்பலை இறக்குவதற்கு 5 நாட்கள் ஆகும் எனவும் அதன் பின்னரே ஏனைய 25 கப்பல்களை இறக்க முடியும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரத்துக்கு 5 கப்பல்கள் இறக்கலாம் என்று பலர் கூறுகின்ற போதிலும் அதைச் செய்வது கடினம் என்றும் 20 கப்பல்களுக்கு டெண்டர் விடப்பட்டாலும், 5 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரலாற்றில் இல்லாத வகையில் மிக மோசமான மின்வெட்டுக்காக வீதி துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அத்துறை சார்ந்த நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி