நாடு முழுவதும் உள்ள 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

இந்நிலையில் அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக மதுபான உரிமங்களைப் பெறுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், பொதுமக்களின் ஆட்சேபனை மற்றும் சில சதொச வர்த்தக நிறுவனங்கள் அடிப்படை நியமங்களுக்கு இணங்கவில்லை என்பதனால் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விதிகளுக்கு இணங்காத சில சதொச நிறுவனங்களுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்கும் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் தேவையான அனுமதிப்பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், சதொச கடைகளில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கலால் திணைக்களம் இதுவரை சுமார் 6,000 மதுபான உரிமங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி