1200 x 80 DMirror

 
 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

 

இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தநிலையிலேயே, தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பாக ஜனாதிபதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி