ஊழலையும் மோசடிகளை ஒழிப்பதற்காக சுதந்திரமான பலம் வாய்ந்த ஒரு சட்ட கட்டமைப்பை ஸ்தாபிக்க தமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


அதனை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அரசியலமைப்பின் ஊடாக ஸ்திரமானதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் பேரணியின் மூன்றாம் நாள் வியாழக்கிழமை (28) கலிகமுவையில் ஆரம்பமானது.

இதன் போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பம் 30 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளது. தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள் மற்றும் நிதி என்பவற்றை கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு இவ்வாறு வக்குரோத்தடைந்துள்ளது.

இவ்வாறு நாட்டை குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடையச் செய்துள்ள ராஜபக்ஷக்கள் மக்களை ஆணையுடனேயே பதவியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கொள்ளையர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும்.

எக்காரணத்தைக் கொண்டும் இந்நிலைப்பாடு மாறாது. மக்களின் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கும் பொறுப்பு, முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் கையளிக்கப்படும்.

வேறு எவருடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த இரகசிய ஒப்பந்தமும் இல்லை. நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனயே எமது ஒப்பந்தம். என்றார்.

அரசுக்கு எதிரான இந்த பேரணி இன்று தனோவிடவிலிருந்து யக்கல வரையும் , நாளை சனிக்கிழமை யக்கலையிலிருந்து பேலியகொடையை வந்தடையவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி