இன மத பேதமின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்தை குழப்புவதற்கு பலவாறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை பலரது வரவரப்பை பெற்ற போதிலும் பௌத்த தேரர் ஒருவர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த தேரர் அங்கு நின்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இலங்கை மக்களிடையே இனவாத சிந்தனைகளை தூண்டுவதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டிய ஒரு தரப்பினர் மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் செயற்பட்டுவருகின்றது.

எவ்வாறாயினும் இன்று இலங்கையர்களாக காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ள மக்கள் தமது ஒற்றுமையை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.

எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைய ஒற்றுமை இன்றியமையாதது. குழப்பக்காரர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் மக்களின் மத்தியில் முறுவலை ஏற்படுத்தலாம் அவற்றை கண்டுகொள்ளாது அல்லது சகித்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதே வெற்றிக்கான வழி!

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி