1200 x 80 DMirror

 
 

அரசாங்கத்தினுடைய முரண்பாடுகளுக்கு பின்னால் உள்ள சர்வதேச அரசியல் நெருக்கடி தொடர்பில் கடந்த தினங்களில் ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார். கீழ்த்தரமான அவமதிப்பு, அவமானங்கள் சிலவும் ஏற்பட்டன. இருப்பினும் உண்மையை சொல்லப்போனால் ஏன் பயப்பட வேண்டும். ரட்டே ரால சாவதற்கு முன் அல்லது கொலை செய்யப்படுவதற்கு முன்னர் உண்மையை குறிப்பிடுவார். ஏனென்றால் இந்தப் பிரச்சினை இன்னும் பல வடிவங்களைக் கொண்டுள்ளது. தற்போது ரட்டே ரால குறிப்பிடுவது இதன் உள்ளே இருக்கக்கூடிய மஹிந்தவின் தேவைப்பாடு தொடர்பில், அதேபோன்று பெசிலின் தேவைப்பாடு தொடர்பில் மட்டுமே. இன்னும் மைத்திரியின் உடைய தேவைப்பாடு தொடர்பிலும் கதைக்க முடியும்.

 

விமலின் தேவைப்பாடு குறித்தும் கதைத்தல் வேண்டும். இருப்பினும் ரட்டே ரால நினைத்தவாறு விமலின் தேவைப்பாடு தொடர்பில் கதைப்பதனை காலம் தாழ்த்தவில்லை. ஏன் என்றால் அதற்கு தடை தற்போது உள்ளது. எவ்வாறு இருப்பினும் 10ஆம் திகதிக்கு பின்னர் அவற்றை பேசக் கூடியதாக இருக்கும். அதாவது 10 ஆம் திகதி என்பது முக்கியமான ஒரு தினமாக இருப்பதற்குக் காரணம் அன்றுதான் விமலின் கடவுச்சீட்டு வழக்கு தீர்ப்பு வரவுள்ளது. அதனால் அந்தப் பகுதி தற்பொழுது அவை await .. இன்று ரட்டே ரால கூறுகின்ற விடயம் இந்த நெருக்கடியின் உள்ளே உள்ள இன்னுமொரு முக்கியமான பிரச்சினை தொடர்பில். உண்மையில் உள்ளே என்று குறிப்பிட்டாலும் அது காணப்படுவது வெளியில்தான். அதனுள்ளே தான் அரசாங்கத்தினுடைய நெருக்கடியும் இருக்கின்றது.ரட்டே ரால குறிப்பிடுவது அரசாங்கத்தின் உள்ளே அவ்வாறு இல்லை என்றால் மொட்டுவின் உள்ளே இருக்கக்கூடிய முக்கியமான மறுஎதிர் தன்மைதான் பெசில் நாமல் எதிர்த்தன்மை செயல்பாடு. இருப்பினும் அதனை விட பெரிய விடயம் இதனுள்ளே இருக்கின்றது. நாமல் பெசில் முரண்பாடு இருப்பது அரசாங்கத்திற்கு உள்ளே பனிப்போர் என்ற அடிப்படையில் இருப்பினும் அது ஒவ்வொரு அடிப்படையில் வெளியிலே வந்து கொண்டு இருக்கின்றது.

அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த விடயம் தெரிந்திருக்கும். வெளியிலே நடக்கும் விடயங்களை உள்ளே நாங்கள் இறங்கி பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் அங்கு இருக்கக்கூடிய விடயம் அரசியல் நிலைப்பாடு என்பது விளங்கக் கூடியதாக இருக்கும். அதனை விளங்குவதாக இருந்தால் நாட்டுக்கு முன்னால் அழகிய ஆடைகளை அணிந்து நடிப்பவர்கள் உள்ளே ஆடை இன்றி நடிப்பது விளங்கும். ரட்டே ரால சொல்வது அவர்களுடைய ஆடையற்ற தன்மையை நாட்டிற்கு காட்டுவதாகும். விமல், கம்மன்பில போன்றோர் செய்வதும் அதன் அடுத்த பக்கம். நாட்டுக்கு தெரிய ஆட்சியாளர்களின் ஆடையின்மையை அவர்களது கையால் மறைத்துக் கொண்டு இருப்பது. அவர்களது ஆடை இன்மையை மறைப்பதற்கு அவர்களிடம் உள்ள கைகளும் அவர்களுடைய கைகளால் மறைக்கவும் முடியவில்லை. தற்போது இரண்டு பேருக்கும் ஆடையற்ற தன்மையே .உண்மையில் இந்த அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய இந்த அதிகாரப் போராட்டத்தோடு இணைந்த சர்வதேச தொடர்புகள் காணப்படுகின்றது.இன்று ரட்டே ரால கதைப்பது அதனையே.ரட்டே ரால தொடராக குறிப்பிட்டது நாம் சர்வதேச நாடுகளில் மூன்று நாடுகளின் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ளோம் என்று.அது அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா என. எவ்வாறு இருப்பினும் இந்த நாடுகள் அவர்களுடைய பொருளாதார அரசியல் உபாய நுட்பங்களுக்குள் இலங்கையை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

அது எங்களோடு இருக்கக்கூடிய அன்புக்கு அல்ல என்பது போல நேற்று இன்று நடைபெற்ற வேலையும் அல்ல. இலங்கையின் பூகோள அரசியல் அமைப்பை நோக்கும் போது எந்த ஒருவருக்கும் இலங்கையை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. அந்த அளவு முக்கியமானது. கிழக்கு ஆசியா மேற்கு பக்கம் மூலம் உள்நுழையவும் வெளியேறவும் உள்ள கதவுதான் நாம்.அது சரியாக மஹிந்தவின் சலூன் கதவு போலவே.அந்த கதவால் கடந்த கால வரலாறு முழுவதும் ஒவ்வொரு வகையான பொருட்கள் உள்ளே வந்தன. அதேபோன்று எங்களை சேர்ந்தவர்களையும் அதனுள்ளே கொண்டு போட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளே இருந்து கொண்டு சும்மா இருக்க வில்லை. அதன் உள்ளே போட முடியுமான அனைத்து விளையாட்டுகளையும் மேற்கொண்டார்கள். இன்னும் மேற்கொள்கிறார்கள். அந்த விளையாட்டுக்களுக்கு ஆடும் விளையாட்டு சேனக்கள் பலர் இங்கு உள்ளனர். கர்மம் யாதெனில் அவர்களின் அடிக்கு ஆடும் ஆடும் விளையாட்டு சேனக்களான ஆட்சியாளர்கள் இங்கிருப்பதாகும். ஜேஆர் இதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தேயத்தை கொண்டு வந்து இதறை மேற்கத்தேய கொலனியாக மாற்றினர். அன்று இந்தியா இருந்தது அமெரிக்காவுக்கு எதிராக என்பதனால் சம காலத்தில் இந்தியா எங்களுக்கு செய்யக்கூடிய அனைத்து வகையான துரோகங்களையும் செய்தது. அதிகாரத்தால் எங்களையும் இந்தியன் கொலனியாக்கினார்கள்.

அதன் பின்னர் சந்திரிகா இதனை ஏதோ ஒரு சமமான முறையில் கொண்டு சென்றார். சந்திரிக்கா மேற்கத்தேய சார்பு உடையவராக இருந்த போதிலும் ஒரே தடவையில் அவற்றை அடுத்த பக்கத்துக்கு கொண்டு செல்லவில்லை போன்று உலகத்தினுடைய இடதுசாரி நாடுகளை கைவிடவும் இல்லை. அதற்கு தாய் தந்தை மூலம் கொண்டுவரப்பட்ட உரிமங்கள் இருந்திரிக்கக்கூடும்.இருப்பினும் மஹிந்த அதிகாரத்திற்கு வருகை தந்த பின்னர் வேகமாக சீனாவின்பக்கம் தள்ளப்பட்டார். உண்மையில் மஹிந்த சீனாவோடு செய்தது செய்துகொண்டது இராஜதந்திர கொடுக்கல் வாங்கல் அல்ல. இராஜதந்திர தொடர்புகளை பயன்படுத்தி வியாபாரத்தை மேற்கொண்டார். சீனா ஒவ்வொரு சந்தையை நோக்காகக் கொண்டு பொருட்களை தயாரிப்பது போன்று அந்தந்த நாடுகளின் அரச தலைவர்கள் கேட்கின்ற அடிப்படையில் அரசியல் வளங்களையும் வழங்கியது. genuine என்றால் genuine தான்.திருடர்கள் என்றால் அவர்கள் genuine இவர்கள் திருடர்கள். இருப்பினும் அந்த கொடுக்கல்வாங்கல் நடைபெறும். சீனா மஹிந்தவுக்கு ஏற்ற அடிப்படையில் களத்தை தயார் செய்தது. சீன முதலீடு மற்றும் கடன் மூலம் உயர்ந்தபட்சம் இலாபத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் ராஜபக்சக்கள் என்பதை அறிந்து கொண்டு சீனாவின் தேவைகளை நிறைவேற்ற அந்த விடயத்தை பெற்றுக்கொள்வதற்காக மஹிந்தவோடு செயற்பட்டது.

மஹிந்தவின் சீன சார்பு நிலை காரணமாக மேற்கத்தேயம் எங்களுக்கு இல்லாமல் போனது. இந்தியா கூட எங்களுடன் வேகமாக தூரமாகியது. சீனா கடந்த காலத்தில் இங்கு வேகமாக கால் பதித்தது நடைபெற்றது. அனைவரும் குறிப்பிட்டது மஹிந்த இந்த நாட்டை சீன கொலனியாக செய்துவிட்டார் என்று. இருப்பினும் மேற்கத்தேயம் இந்த விடயத்தை பொறுமையாக பார்த்திருக்கவில்லை மேற்கத்தேயம் மஹிந்த ஆட்சியை மாற்றி நல்லாட்சியை கொண்டுவந்தது. இருப்பினும் நல்லாட்சியின் இடையே மேற்கத்தேயத்துக்கும் சீனாவுக்கும் ஏற்ப நாட்டை திருப்ப முடியாமல் போனது. ரணில் மேற்கத்திய சார்பு உடையவராக இருந்த போதிலும் சீனா வந்தளவு தூரத்திற்கேற்ப மேற்கத்தேயத்திற்கும் சீனாவுக்கும் 100 வீதம் என்ற நிலைக்கு எமது நாட்டை தள்ளிவிடவில்லை. அடுத்ததாக மைத்திரி மேற்கத்தேயம், இந்தியா, சீனாவின் அரிவாளாக இல்லாது இருந்தது அதற்கு கூடிய தாக்கம் செலுத்தியிருக்கும்.மைத்திரி எந்தவொரு உலக நாட்டுத் தலைவர்களையும் சந்தித்தபோது அவர் நாட்டிற்காக எதனையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடனேயே இருந்தார். அதனால் தங்களுக்கு என்று ஒன்றை மேற்கொள்ள முடியாதபோது மேற்கத்தேயமும் சீனாவும் நல்லாட்சியை மாற்றியமைப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு உதவி வழங்கியது

மேற்கத்தேய முகவர்களாக செயற்பட்ட கோட்டாபய மற்றும் பெசில் இதனுடைய பிரதான நபர்களாக இருந்தனர். அதேபோன்று சீனாவின் முகவராக மஹிந்தவும் அந்த கூட்டத்தில் இருந்தார். இரு நபர்களும் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்தார்கள்.அதிகாரத்தையும் பெற்றார்கள். இருப்பினும் இந்த இடத்தில் வெற்றி பெற்றது மேற்கத்தேயமும் இந்தியாவும். உண்மையில் பெசில் நிதியமைச்சராக வந்ததன் பின்னர் மேற்கத்தேய தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. எமது நாட்டு நிர்வாகம் முழுமையாக மேற்கத்தேய மற்றும் இந்தியன் பொம்மையாக மாற்றம் பெற்றது.தற்போது இருவரும் நாட்டை மேற்கத்தேய பக்கத்திற்கு நாட்டை திருப்பியுள்ளனர். அதனால் மஹிந்த மூலமாக மேற்கொள்ள இருந்த சீன எதிர்பார்ப்பு முறிவடைந்துள்ளது. உண்மையில் மஹிந்த இன்று அரசாங்கத்தில் செல்லாக்காசாக மாறிவிட்டார். அனைத்தும் நடைபெறுவது பெசிலுக்கு தேவையான முறையில்.சீன கருத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு மேற்கத்திய மற்றும் இந்திய திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை கூட சீனா கைவிட்டு செல்ல வேண்டிய ஒரு நிலை.

இருப்பினும் அன்று ரட்டே ரால குறிப்பிட்ட விடயங்கள் ஞாபகத்துக்கு வருமாயின் சீனா தற்போது செல்லுவது மீண்டும் வரும் நோக்கத்தோடு. உண்மையில் சீனா தற்போது வந்துள்ளது. சீனா தற்போது இந்த அரசாங்கத்தை கைவிட வேண்டும். அதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. அதற்கு அரசாங்கத்தின் உள்ளே போன்று வெளியேயும் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது. தற்போது எதிர்க்கட்சியிடம் முன்னர் இருந்த சீன விரோதம் இல்லை. தற்போது சஜித்தின் நாட்டுக்கு சுவாசம் வேலைத்திட்டத்திற்கும் சக்வல வேலைத்திட்டத்திற்கும் சீனா உதவி செய்கின்றது. சீனத் தூதுவர் மைத்ரியின் வீட்டுக்கு வந்து சந்திக்கின்றார். அதேபோன்று மஹிந்தவுடன் மிக நெருக்கமாக கொடுக்கல் வாங்கல்களையும் சீன தூதுவர் செய்கின்றார்.வேலை யாருக்கும் தெளிவாக இல்லாவிட்டாலும் ரட்டே ராலவுக்கு தெளிவாக உள்ளது.மஹிந்த மூலம் சீனாவின் தேவைகள் தற்போது சீனாவில் தேவையை வெளியில் கொண்டு வர முடியாது. சீனா இதன்போது அசிங்கமான அமெரிக்கரை இலக்கு வைக்கின்றது போல் தெரிகின்றது. அது ஒவ்வொரு அடிப்படையில் வெளிவர ஆரம்பித்துள்ளது. முழு நாடும் சரியான பாதைக்கு எடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட project அதன் ஒருமுறைதான். இல்லை என்றால் வேறு project வேறு அரசியல் கட்சிகளாலும் அதேபோன்று வரக்கூடும்.

அவ்வாறெனின் அதற்கு எதிரான மேற்கத்தேய மற்றும் இந்தியன் அதறகடுத்த பக்கத்தில் வெளியிலே வருகின்றார்கள். அது வருவது இந்தியன் உதவி பேக்கேஜ் என்ற அடிப்படையில்.பெசில் தற்போது அடிப்படைவாதிகள் அற்ற அரசாங்கத்தை ஏற்படுத்த அனைவரிடமும் அழைப்பு விடுத்திருப்பது அந்த வேலைக்குத் தான். அதனால் சர்வதேச தேவையினுள்ளே தமது தேவைகளை இணைக்கின்ற ஆட்சியாளர்கள் சிலரே எமக்கு இருக்கின்றார்கள்.மஹிந்த,பெசில், கம்மன்பில,விமல் போன்றோரும் மேற்கொள்வது ஏதோ ஒரு நாட்டினுடைய தேவைக்கே. இருப்பினும் நாட்டினுடைய கருமம் என்னவென்றால் அந்த சர்வதேச தேவையை நிறைவேற்ற ஆடும் இந்த பொம்மைகளை இனம் காணக்கூடிய எமது நாட்டின் பொதுநலன் அரசியல் தன்மை காணப்படாமையே. இன்றும் எமது நாட்டில் அதிகமான மக்கள் தேசபற்று உடையவர்கள் என்ற விடயத் கூறி சர்வதேசத்தினுள் மூழ்குவதற்கு நாட்டை உட்படுத்துகின்றனர்.ரட்டே ரால அதன் மூலமாக குறிப்பிட விரும்பவில்லை அமெரிக்கா, இந்தியா, சீனாவோடு கொடுக்கல் வாங்கல்களை செய்யாமல் இருப்பதற்கு அல்ல. நாங்கள் எந்த ஒரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும்.

அதனுள்ளே ரோ,சிஅய்ஏ மட்டுமல்ல இன்னும் பல இருக்கலாம். இருப்பினும் எங்களுக்கே உரிய வெளிநாட்டு கொள்கை இருத்தல் வேண்டும். அந்த இடத்தில் ரட்டே ராலவுக்கு சம்பிக்க குறிப்பிட்ட சம நட்பு வெளிநாட்டு கொள்கை என்ற வாக்கியத்திற்கு மிகவும் விருப்பம். அதுதான் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன மொழிவுகளுள் உள்ள சிறந்த வாக்கியம் ஆகும். அதனால் நல்லது யாருடையதாக இருந்தாலும் அதனை எடுப்பதற்கு பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அதே போன்று தம் அதிகார தேவைக்காக எந்த ஒரு நாட்டினுடைய வித்தாகவும் நாங்கள் மாற வேண்டிய அவசியம் கிடையாது.பெசிலுக்கு இந்த குற்றச்சாட்டு ஏற்புடயதன்றாக அமையலாம். ஏன் என்றால் அவர் ஒரு அமெரிக்கன் வித்தல்ல. வேர். தற்போது இந்த நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சரவையில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு நடைபெற்று முடிந்துவிட்டது. இந்தியா, சீனா, அமெரிக்காவின் முகவர்கள் தான் அதனுள் இருப்பது, எங்களுடைய நாட்டைச் சேர்ந்த எந்த ஒருவரும் அதனுள்ளே கிடையாது. அதனால் நாங்கள் மேற்கொள்ள வேண்டியது அரசியல் கட்சியினுடைய பக்கத்தில் நின்று கொண்டிருப்பது அல்ல, நாட்டினுடைய பக்கத்தில் நின்று கொண்டிருப்பதே.

நாட்டுக்கு கேடு என்றால் யாராக இருந்தாலும் எதிர்ப்பே. அது மஹிந்தவா,கோட்டாபயவா, மைத்திரியா, விமலா,சஜித்தா,அனுரவா,சம்பிக்கவா என்ற விடயம் இந்த இடத்தில் பொருந்தாது. இன்றும் ரட்டே ரால அழைப்பு விடுப்பது அந்த கூட்டத்திற்கு வாருங்கள் என்று.அந்த கூட்டத்தில் உள்ள அபிமானத்துடனான இலங்கையராக வர.

அப்படியாயின் போய வருகின்றேன். கடவுள் துணை ,வெற்றி கிடைக்கும்.

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி