1200 x 80 DMirror

 
 

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.


இதுகுறித்து அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஊடக அறிக்கை

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்


ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது ஆயுதம் தாங்கிய நபர்களால், பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின்முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசிர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமுதித சமரவிக்கிரமவின் ஊடகப் பணி தொடர்பில் ஏதேனும் தரப்பினருக்கு பிரச்சினை இருப்பின், அது தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்லை எமது சங்கம் வன்மையாகக் கண்டிகின்றது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகைள மேற்கொள்ள எமது சங்கம் தயங்காது.

துமிந்த சம்பத்,
தலைவர்

பிராங்க் டி சொய்சா ,
செயலாளர்

1402 SLWJA

ஊடகவியலாளர் சமுதித்த வீட்டின் மீது நடத்தப்பட் தாக்குதல்

வீட்டில் தான் உறங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்படும் ​​பெரும் சத்தம் கேட்டே விழித்தெழுந்ததாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரை அச்சுறுத்தும் வகையில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகவியலாளர் சமுதித இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த தாக்குதல் காரணமாக வீட்டின் பல ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.

வீடு முழுவதும் மலத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் பெயரிட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் தொடர்பான சிசிடீவி காணொளிகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி