நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 31ஆம் திகதி வரை சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் 6 படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 43 இந்திய மீனவர்கள், காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள், மேலதிக விசாரணைக்காக யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி