நாடு பற்றிஎரியும் நிலைமையிலும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார், நாடு பற்றிஎரிந்தாலும் அதுதொடர்பில் கவலைப்படாது, தங்களது சுகபோக வாழ்க்கைகளை அனுபவிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கையின் வலுசக்திக்கு யுகதனவி மின்உற்பத்தி நிலையம் மிகவும் முக்கியமானது. இதனை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்கப் பிரஜையான பெசில் ராஜபக்ஷ வழங்கியுள்ளார் என்றார்.

யுகதனவி ஒப்பந்தத்தைப் பாராளுமனற்த்தில் சமர்ப்பிக்க எவரும் முயற்சிக்கவில்லை. நானே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். இந்த ஒப்பந்தத்தை ஏன் அரசாங்கம் ஒழித்து வைத்திருக்க வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி