ராஜபக்ஷ அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இன்று ஆசிரியர்களின் கல்வித்தரம் அதிபர்களின் தரம் என்பவற்றுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படாமல் இன்று ஒரு போராட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது .

ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுதான் இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது ஒரு இரவிலேயே அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என சொன்னால் அவர்கள் எவ்வாறு மாறமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக உலகில் இயற்கை விவசாயம் இயற்கையான உணவு மனிதனுக்கு முக்கியமானது என சுட்டிக்காட்டிய சிறிதரன், இது உலக அரங்கில் தற்போது வளர்ந்து வருகின்றதாகவும் கூறினார்.

இந்த நிலையில் அது இலங்கையிலும் தற்போது வளர்ந்து வருகின்றதாகவும் அதற்காக நாங்கள் குரல் கொடுத்திருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி