மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரில், அலரி மாளிகையில் குறித்த கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதேபோன்று பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பசில் ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ், சாகர காரியவசம் உள்ளிட்டோரும் பங்பேற்றிருந்தனர்.

ஆனால் குறித்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இதுவரை எந்ததொரு தகவலையும் இரு கட்சிகளும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி