கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதால், தடுப்பூசி பெற்றுக்கொள்ளும்  அடுத்த முன்னுரிமை அவர்களுக்கு வழங்கப்பட  வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் வசதி இல்லை என்றால் குறித்த தடுப்பூசியை  இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு தேவையான அனுமதியை வழங்க முடியும் என்று உபுல் ரோஹான தெரிவித்துள்ளார். 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியின் கீழ் சுகாதார பிரிவுகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் தனியார் துறை தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி