கல்முனை மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்முனை மாநகரிலுள்ள பிரதான கிளை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் இது மூடப்பட்டிருக்கும்.

வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று தமது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ளுமாறு முகாமையாளர் அறிவித்தல் விடுத்திருக்கிறார்.

அம்பாறை கரையோர பிரதேசத்தில் கொரோனா காரணமாக மூடப்படும் 3வது மக்கள் வங்கிக்கிளை இதுவாகும்.

இதேவேளை சாய்ந்தமருது மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து சாய்ந்தமருதுக்கிளை கடந்தவாரம் மூடப்பட்டது தெரிந்ததே.

இது இவ்வாறிருக்க கொரோனாத்தொற்று காரணமாக 14நாட்கள் மூடப்பட்டிருந்த காரைதீவு மக்கள் வங்கிக்கிளை மீண்டும் கடந்த செவ்வாயன்று திறக்கப்பட்டது.

காரைதீவு மக்கள் வங்கிக் கிளையில் 3 ஊழியருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி உடனடியாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி