1200 x 80 DMirror

 
 

பிரித்தானியாவில் சில முன் நாள் போராளிகளை சந்தித்துள்ள இந்திய புலனாய்வுத்துறை(RAW), மீண்டும் இலங்கையில் ஒரு போராட்டம் வெடிக்க வேண்டும் என்றும். இம் முறை நாங்கள் முழு ஒத்துழைப்பையும் தருகிறோம் என்று கூறியுள்ளார்கள். பல முன் நாள் போராளிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்கள். மேலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சென்ற சில போராளிகள், பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள் என அறியக்கிடைக்கின்றது

ஏன் எனில் எம்மை மீண்டும் பாவித்து விட்டு ஒரு காலத்தில் தூக்கி எறிந்து விடுவீர்கள். இல்லை அமெரிக்காவோடு இணைந்து அழித்து விடுவீர்கள். இதுவே வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடம் என்று முன் நாள் போராளிகள் “றோ” அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்கள். மேலும் புலிகளை விடுத்து மாற்று இயக்கங்களோடு போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக பேச றோ அதிகாரிகள் முனைப்புக் காட்டி வருகிறார்கள் என்றும்  சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த கூட்டங்களை நடத்தும் றோ அதிகாரிகள் முழுக்க முழுக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும். அதில் ஒருவர் கூட வட நாட்டை சேர்ந்தவர் அல்ல என்றும் போராளிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள். இம் முறை இந்த அசைன்மெண்டை, டெல்லியின் கட்டளையை ஏற்று, தமிழக றோ பிரிவே கையாண்டு வருவதாக மேலும் அறியப்படுகிறது.

அதிர்வு இணையம்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி