இலங்கையின் மனித உரிமைப் பதிவு ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 12 நாட்களில் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில் கொவிட் தொற்றினால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
"அடக்கம் செய்யலாம்." எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (பிப்ரவரி 10) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் தங்களது குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் புறக்கணிப்பது குறித்து கவலை தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் நீர் வழியாக பரவுவதில்லை என்று நாடாளுமன்றத்தில் சுகாதார இராங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறியிருந்ததை அடுத்து, உடல்களை அடக்கம் செய்யாதது ஏன் என்று எதிர்க்கட்சி நா.உ கேள்வி எழுப்பினார்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் பிரதமரிடம் கேள்வி கேட்டபோது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சி நா.உ.இப்படி கேள்வி கேட்பது விதிமுறை அல்ல என்றும் அவர் தேவையற்ற கேள்விகளைக் கேட்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
2021 மார்ச் 22 முதல் 23 வரை ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை மதிப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.நா. உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட்டின் அறிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு கொவிட் 19 தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இலங்கைக்கு இம்ரான் கான்
இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 22 ஆம் திகதி இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் திடீர் உத்தியோகபூர்வ விஜயம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஏனெனில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் கடுமையான கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் உயிரிழந்த சடலங்களை அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்த போதிலும், சிவில் சமூக அமைப்புகள், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இலங்கையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன, இலங்கை அரசாங்கம் அவர்களின் உரிமைகளை பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் மற்றும் தமிழ் சமூகங்களும் அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து பல போராட்டங்களை நடத்தியுள்ளன.
கிழக்கில் இருந்து வடக்கிற்கு நடந்த ஐந்து நாள் சமாதான அணிவகுப்பின் கோரிக்கைகளில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கலந்து கொண்ட பேரணியில் கொரோனா தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச அழுத்தம்
இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயின் முதல் அலையைத் தொடர்ந்து, உலகின் மிகச் சக்திவாய்ந்த இஸ்லாமிய அரசுகள், முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உட்பட, சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கும் துன்புறுத்தலை நிறுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்டிக்கும் 57 நாடுகளின் குழுவான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் இஸ்லாமிய நடைமுறைகளின் பரிந்துரைகளுக்கு மாறாக கொரோனா வைரஸால் இலங்கையில் மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதோடு,கொவிட் 19 தொற்றுநோயை அடக்குவதற்கு பொறுப்பான அதிகாரிகளும், சமூக ஊடகங்களும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முஸ்லிம்களின் வெறுப்பைத் தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.