கொரோனா வைரஸால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அனுமதி கோரி எதிர்வரும் டிசம்பர் 23 புதன்கிழமை அன்று நியூயோர்க் நகரில் போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தை (Voice For Sri Lankan Muslim) வாய்ஸ் ஃபார் இலங்கை முஸ்லீம் என்ற அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அனுமதி கோரி பிரான்சில் இலங்கை முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்திய அமைதியான போராட்டம் ஒன்று  பிரெஞ்சு-இலங்கை முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடலிடன் (மக்கள் சதுக்கத்தில்) கடந்த  சனிக்கிழமை19 ம் திகதி இடம்பெற்றது.

கொரோனா தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இலங்கை அரசு மறுத்ததை எதிர்த்து டிசம்பர் 12 அன்று லண்டனிலும் போராட்டமும் ஒன்று  நடந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி