ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ ஆட்சியின் ஒரு வருடத்திற்குப் பிறகு சிலர் இதை 'தோல்வி' என்று அழைத்தாலும்,உண்மையாக என்ன நடந்தது இது அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த சித்தாந்தத்தின் தோல்வி என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

"நாட்டின் பெரும்பாண்மையான மக்கள் ஒரு சிங்கள பௌத்த அரசாங்கத்தை உருவாக்க விரும்பினர். அதற்காக மிக உயர்ந்த வெற்றியும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த கருத்தியல் பார்வையில் தோல்வி ஒரு வருடத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது ... '' இன்று (ஞாயிற்றுக்கிழமை 20) மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

'மாத்தறை பொதுமக்கள்' சார்பாக இக்கூட்டத்தை மாத்தறை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும், மாத்தறை நகர சபையின் முன்னாள் மேயர் உபுல் நிஷாந்த ஏற்பாடு செய்திருந்தார்.

 கூட்டத்தில் முதன்மை பேச்சாளராக 'உண்மையான தேசபக்தர்' அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட முன்னாள் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் முடிவடைந்து 4 மாதங்கள் ஆகின்றன. நாடு முழுவதும் குழப்பத்தில் உள்ளது. 70 களில் கூட இல்லாத பொருளாதார நெருக்கடியை நாங்கள் இன்று எதிர்கொள்கிறோம். மோசடியும் ஊழலும் உயர்ந்துள்ளன, சட்டத்தின் ஆட்சி மறைந்துவிட்டது, முதலீட்டாளர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள், சர்வதேச சமூகத்திலிருந்து நாம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறோம்.

 இப்போது செல்ல வேண்டிய இடம் 'ஐயா தோல்வி.

மொட்டுக்கு வாக்களித்தவர்களும், "ஐயா தோல்விே என்கிறார்கள் குரல் கொடுப்பவர்களும் சேர் தோல்வி என்று ரகசியமாக துப்புகிறார்கள்.

எதிர்க்கட்சியில் உள்ள சிலர் ஏற்கனவே ஐயாவை விட ஒரு சிங்கள அரசாங்கத்திற்காக பல் துலக்குகிறார்கள்,

ஆனால் நண்பர்ளே நான் சொல்கிறேன் 'ஐயா தோல்வியடையவில்லை. ஐயா பிரதிநிதித்துவப் படுத்திய சித்தாந்தம் மீண்டும் தோல்வியடைந்துவிட்டது.

நாடு 56 இலிருந்து பின்னோக்கி செல்கிறது!

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மேலும் விரிவாகக் கூறிய மங்கள, 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க காலத்திலிருந்து இந்த கருத்தியல் ஏமாற்றத்தால் நாடு எவ்வாறு படுகுழியில் மூழ்கியது என்பதை சுட்டிக்காட்டினார்.

மூன்றில் இரண்டு பங்கு மக்களின் ஆதரவு இருந்தபோதிலும், இந்த சித்தாந்தம் இனி நாட்டிற்கோ அல்லது மக்களுக்கோ பயனளிக்காது என்று மங்கள சமரவீர விளக்கினார், மேலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பாண்மை ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் நாடு அழிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

'' நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மாற்று சித்தாந்தம் தேவை ''

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மாற்று சித்தாந்தத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கு நாடுகளை மீண்டும் கட்டியெழுப்ப 'தாராளமய ஜனநாயகம்' அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், இந்த சித்தாந்தம் எங்களுக்கு புதியதல்ல என்றும், 2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பௌத்த தத்துவத்தின் சாராம்சம் இன்னும் மனிதாபிமானமானது என்றும் கூறினார்.

"இன்று, உலகில் மிகவும் வளர்ந்த மேற்கத்திய நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தாராளமய ஜனநாயகத்தின் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயற்படுகின்றன ...

ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பார்வை நமது கௌதம புத்தரால் உலகிற்கு கற்பிக்கப்பட்ட பௌத்த பெரும்பாண்மையைக் கொண்ட இலங்கைக்கு பௌத்த தத்துவத்தின் சாராம்சத்தின் அடிப்படையிலான அரசாங்க அமைப்பு தேவை.

இந்தியாவை போன்று மாட்டிறைச்சியை தடை செய்வது அல்லது முஸ்லிம் நாடுகளைப் போல பன்றி இறைச்சியை தடை செய்வது பற்றி நான் பேசவில்லை.

கடந்த காலங்களைப் போன்று பார்களை மூடுவது பற்றி நான் பேசவில்லை.

பெண்கள் கால்களை மூடி, குழந்தைகள் புடைவை அணிவதைப் பற்றி நான் பேசவில்லை.

பௌத்தர்கள் எள்ற அடிப்டையில் எமக்கு அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நோயிலிருந்து குணமடைய வேண்டும் என்ற கருத்துடன் நவீனத்துவ அரசியல் பயணத்தில் எங்களுடன் இணையுமாறு பௌத்தர்களாகிய உங்களை அழைக்கிறேன் என்று மங்கள சமரவீர கருத்து தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி