பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியாரச்சி வளைவில், தனியார் பஸ் ஒன்றும் இலங்கை
போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்த நிலையில், பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.