நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இதனை அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கான பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது.
இந்நிலையில், பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த தேர்த்திருவிழாவில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்பிரகாரம், கல்வி அமைச்சின் செயலாளருக்கு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.