ஈரான் (Iran) மீது இஸ்ரேலின் “operation Rising Lion” வான்வழித் தாக்குதல்களில் பல இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள்

கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்ததுடன் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் (Iran) இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வகையில், கோமில் உள்ள ஜம்கரன் மசூதியில் ஈரான் சிவப்புக் கொடியை ஏற்றியுள்ளது.

இச்சிவப்புக் கொடியானது ஷியா பாரம்பரியத்தில் நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பைக் குறிக்கிறது.

இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாரிய அளவிலான இராணுவ மோதலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், இன்று (13) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், விரோதப் தரப்பினரிடமிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான வீடுகளுக்கு அருகில் இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகிறது.

இஸ்ரேலும் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.

இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகிறது. மேலும், தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சமீபத்திய நிலைமை குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

ஈரான் மீதான தொடர்ச்சியான பாரிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டுள்ளார்.

"ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ தலைமையகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என்பதால், இஸ்ரேல் தனது நாட்டில் அவசரகால நிலையை அறிவித்து அனைத்து பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய மையங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேலிய IAF ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன.

ஈரானின் முக்கிய இராணுவப் பிரிவாகக் கருதப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையகமும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்காகியது.

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மொஹமட் பகேரி கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.

இந்த தாக்குதல்களில் ஈரானிய அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்ட பல விஞ்ஞானிகளும் குறிவைக்கப்பட்டனர்.

எனினும், நட்சான் அணு ஆய்வகத்திற்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டாலும், அங்கு கதிரியக்க அளவு அதிகரிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது.

ஈரான் ஏற்கனவே சுமார் 200 போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் இஸ்ரேலின் கொடூரமான தன்மையை விளக்குகிறது என்றும், இஸ்ரேல் தனது நாட்டிற்கு ஒரு கசப்பான விதியைத் திட்டமிடுகிறது என்றும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அல்-கமெய்னி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது தாக்குதலின் ஆரம்பம் என்றும், தேவையான அளவுக்கு ஈரானை தாக்குவதே அவரது திட்டம் என்றும் வலியுறுத்தினார்.

ஈரான் அணு ஆயுதம் வாங்குவதைத் தடுக்கவும், அதன் மூலம் அதன் மக்களைப் பாதுகாக்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் மேலும் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் உதவவில்லை அல்லது தூண்டவில்லை என்று கூறியுள்ளது.

இருப்பினும், அமெரிக்கா சமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து அனைத்து அத்தியாவசியமற்ற அமெரிக்கர்களையும் வெளியேற்ற உத்தரவிட்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தை சீர்குலைக்கும் வகையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி