மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சென்ற பஸ் ஒன்று, அவிசாவளை - கொழும்பு பழைய வீதியின் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலைலிருந்து கொழும்பை நோக்கி பயணிகளுடன் பயணித்த பஸ், ஒருகொடவத்த பகுதியில் வீதியோரம் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மீது பின்புறமாக மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.