பிரதேச சபையின் ஒப்புதலுடன், போதகர் ஜெரோமின் சபைக்குச் சொந்தமான நாவலப்பிட்டி - மீப்பிட்டி பகுதியில் உள்ள
காணிக்கு மதில் சுவர் கட்டத் தயாரான கிராமவாசிகள் சிலருக்கு, பௌத்த தேரர் ஒருவருடன் வந்த ஒரு குழுவினர், கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த குழுவில் இருந்த ஒருவர், “உங்களைக் கொல்வது உறுதி” என்று அச்சுறுத்தும் வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தான் இந்த அச்சுறுத்தலை, அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் அனுமதியுடன்தான் விடுப்பதாகத் தெரிவித்தாரென்று, கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
நாவலப்பிட்டி – மீபிட்டிய அசோக்காராம விகாரையின் விகாராதிபதியும் கிராமவாசிகள் சிலரும், இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்படி பாதுகாப்பு மதில்சுவர் மற்றும் கேட் நிர்மாணிக்கத் தேவையான சீமெந்து, கல், கருங்கல் போன்ற மூலப்பொருட்கள் எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, இந்த எதிர்ப்பு நடவடிக்கையும் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.