சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் மீது டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.
அவர்கள் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஆதாரமற்ற வழக்குகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்ரீநீதிபதிகள் மீது அமெரிக்க அரசாங்கம் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை.
இந்த வழக்குகளுடன் தொடர்புடைய உகண்டா, பெரு, பெனின் மற்றும் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க குடிமக்கள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், தொடர்புடைய தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.