2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கும்
பட்டியலூடாக தெரிவாகிய சபை உறுப்பினர்களுக்குமான சத்தியபிரமாண நிகழ்வானது, கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம் (07) இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள் இதன்போது சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்.
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய பிரதேச சபைகளிலும், ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துலை ஆகிய நகர சபைகளிலும், நுவரெலியா மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டு, 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.
மேலும், வலப்பனை பிரதேச சபையில் நாற்காளி சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தமாக 41 உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.