பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்

விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம். வெங்கடேஷ் என்ற சமூக ஆர்வலர் ஒருவர், சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விராட் கோலி மீது புகார் அளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கப்பன் பார்க் போலீசார், புகார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும், விசாரணையின் போது அது சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்தது.

- Hindu

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web