விவசாயம் செய்யப்படாத அனைத்து நிலங்களையும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தும் தேசிய
வேலைத்திட்டம், இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் கீழ், நாடு முழுவதும் பயிரிடப்படாத நிலங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.