பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாகக் கூறி, இரண்டு நபர்கள் யாழ்ப்பாணம் பொது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தாக்கியதாகக் கூறியே, மேற்படி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், நேற்று (11) இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இரு தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, எதிர்காலத்தில் பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web